Tuesday, November 30, 2021

தமிழே உலகின் மூத்த மொழியா ? சில சந்தேகங்கள்

தமிழே உலகின் மூத்த மொழியா ?  சில சந்தேகங்கள் 


1) நம் பாரத நாட்டில் 1600க்கும் மேற்பட்ட பாஷைகள் வழக்கத்தில் இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.  இவை அனைத்திற்கும் 'தமிழே' தாய்மொழி என்பது 'நம்பும்படி' (அல்லது) 'ஏற்றுக்கொள்ளும்படி' இல்லை (அல்லது) இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை  


2)  பின்வருவனவற்றுள் எது உண்மையாக இருக்க முடியும் என்பதை நான் உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் 

(a)  'தமிழ்' இருந்த (அல்லது) வளர்ந்து வந்த காலத்தில், இந்தியாவில் தமிழை தவிர வேறு மொழியே கிடையாது 

(b)  'தமிழை' தவிர இந்தியாவில் வேறு ஒரு சில மொழிகள் இருந்தன ஆனால் அவற்றிற்கு 'எழுத்துருவம்' (script) கிடையாது 


தமிழர்கள் lemuria (லெமுரியா) கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்கிற ஒரு சாராரின் கருத்துப்படி. லெமூரியா அழிந்த காலத்திற்கு பிறகு தமிழர்கள் இப்போது உள்ள 'தமிழ்நாட்டுக்கு' நகர்ந்து இருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம் 


இப்போது பின்வரும் ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம் 


பண்டைய காலத்தில் மனிதர்கள் சிறு-சிறு குழுக்களாக வசித்து வந்தனர் என்பது  நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.  இப்போது தமிழ்நாட்டில் ஏதோ ஒரு பகுதியில்  'ஒரு குழு' (Group  A) இருந்ததாக வைத்து கொள்வோம்.   அதே போல் ஆந்திராவில் (Group  B) ஏதோ ஒரு பகுதியில் 'வேறொரு குழு' இருந்ததாக வைத்து கொள்வோம்  


தமிழே உலகின் 'முதல்' (அல்லது) 'மூத்த' மொழி என்பதால் இந்தியாவில் வழக்கத்தில் இருந்த 1600 மொழிகளுக்கும் 'தமிழே' தாய் மொழியாக இருந்து இருக்க வேண்டும் 



அதாவது  'Group Aல்'  இருந்து ஒருவர் (அல்லது) ஒரு சில பேர்  'Group B' மக்களை சென்றடைந்து அவர்களுக்கு தமிழ் சொல்லி கொடுக்கும் வரை 'Group B' மக்கள் சைகை பாஷை தான் பேசி இருக்க வேண்டும்.  ஏனெனெனில் பண்டைய இந்தியாவில் 'தமிழை' தவிர வேறு மொழி இல்லை 


இது நம்பும்படி (அல்லது) ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறதா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் 


குறிப்பு:-  ஒரு மனிதன் ஒரு பகுதியில் இருந்து வேறொரு பகுதிக்கு செல்வது என்பது பண்டைய (அல்லது) ஆதி காலத்தில் மிகப்பெரிய சவாலாக இருந்திருக்க வேண்டும்.  ஏனெனில் 'மனிதர்கள்' காடுகள், மலைகள், கரடு முரடான பாதைகள், பாம்புகள், தேள்கள், வனவிலங்குகள் என அனைத்தையும் தாண்டி தான் வேறொரு பகுதியை அடைய முடியும்  


என் கருத்துப்படி குறைந்தபட்சம் '3-4 மொழிகள்' (ஸமஸ்க்ரிதம் and தமிழை தவிர) சமகாலத்தில் இருந்து இருக்க வேண்டும் (உதாரணமாக prathmic).   ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொழிகள் வளர்ந்து வந்த காலத்தில் அவை உருமாற்றம் அடைந்து, வழக்கொழிந்து போயிருக்க வேண்டும் என்பதே உண்மை.  


எந்தெந்த மொழிகள் எந்தெந்த காலத்தில் இருந்தது என்பதை  நிரூபிக்க இப்போது நம்மிடம் போதிய சான்றுகள் இல்லை என்பதே உண்மை 


நன்றி
சதீஷ் குமார்  

Sunday, November 28, 2021

Is 'Tamil' the oldest language ? தமிழ் தான் உலகின் மூத்த மொழியா ? சில சந்தேகங்கள்

 Is 'Tamil' the oldest language ?  Few logical (?) questions


1)  There were more than 1600 languages spoken in India. It's quite unbelievable that 'Tamil' is the mother language for all the 1600 languages that were spoken in India.  I am not sure how far this true or possible? 


2. I am not sure which one of the following is correct (a) or (b)

   (a)  There was no indian language at all when 'Tamil' was originated (or) developed

   (b)  There were NO Indian languages which had SCRIPT associated with them during the period when Tamil 'evolved' or 'orginated'


Let us consider the following scenario


As we all knew during the ancient days people used to live in small groups


Let's say a set-of-people (Group A) who spoke 'Tamil' lived in some region of TamilNadu.  And there was another set-of-people (Group B) lived in some region of 'Andhra'


As 'Tamil' is the mother language for all other 1600 Indian languages 'Group B' people should have used 'sign language' (సంకేత భాష or சைகை பாஷை) until a person from 'Group A' reached out to 'Group B' and taught them Tamil


P.S: Travelling from one region to another region was NOT that easy during the ancient days


I personally feel that at least 3-4 languages should have existed apart from 'Sanskrit' and 'Tamil' during the same period.  As languages were evolving they no longer exists and there's no evidence for us to prove that they existed    

Sunday, November 14, 2021

Talent vs Resource Acquistion

 நம் இந்தியாவில் நிறைய பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்/  


பெரும்பாலான பன்னாட்டு நிறுவனத்தில் 'Talent acquisitioln' டீம் என்று ஒன்று இருக்கும் .  இந்த டீமினுடைய வேலை என்னவென்றால் அங்குள்ள 'காலி அல்லது புதிய' பணியிடங்களுக்கு 'சரியான' ஆட்களை தேர்ந்து எடுப்பது தான். 


ஆனால் talent acquistion team அதை செய்வது இல்லை என்பது தான் உண்மை.   உதாரணமாக புதிதாக அல்லது காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒரு நபரை தேர்ந்தெடுக்க அவர்கள் பின்வரும் முறையை தான் தேர்ந்து எடுக்கிறார்கள்  


அதாவது  தேர்ந்து எடுக்கப்பட்ட நபர் 15 நாட்கள் முதல் அதிகபட்சமாக 30 நாட்கள் கால அவகாசத்தில் இவர்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட வேண்டும்/    அதாவது notice period குறைவாக உள்ளவர்களோ (அல்லது) ஏற்கனவே resign செய்தவர்களோ தான்  இவர்களுடைய target.  


பன்னாட்டு நிறுவனங்கள் 'talent acquisition' (அல்லது ) 'interview' என்கிற . பெயரில் என்ன செய்கிறார்கள் என்பது பின்வருமாறு 


1)  நம்மூரை பொறுத்தவரை interviewல் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லிவிட்டால் அவர் தான் புத்திசாலி.  10 கேள்விகளுக்கு 7க்கு சரியான பதில் சொன்னால் கூட போதுமானது.  


இதில் comedy என்னவென்றால் interviewer வருபவர்களிடம் அதே கேள்விகளை வேறு ஒரு நபரிடம் கேட்கமாட்டார்/  கேள்விகளை மாற்றி கேட்பார்.   இரண்டாவது (அல்லது) மூன்றவதாக வந்த நபருக்கு இவருடைய கேள்விகள் எளிமையாக இருந்தால் அவர் எளிதில் select ஆகி விடுவார் 


2)  Weekend drive என்று 2-3 வாரங்கள் தொடர்ச்சியாக ஆள் சேர்ப்பு நடைபெறும்.  அப்போது 1st weekல் வந்த technical panel (அதாவது கேள்வி கேட்கும் குழு) பெரும்பாலும் 2வது வாரத்திற்கு வரமாட்டார்கள் 


இதில் என்ன காமெடி என்றால் 'முதல் வாரம்' interviewல் fail ஆகி 2வது வாரம் நடைபெறும் interview;ல் பாஸ் ஆகி வேலைக்கு  சேர்ந்த நிறைய பேர் உண்டு.  ஏனென்றால் முதல் வாரத்தில் யாரெல்லாம் interviewக்கு வந்தார்கள் என்பது 2வது வாரத்தில் வந்த கேள்வி கேட்கும் குழுவிற்கு தெரியாது அல்லவா ?


இவர்களின் சேட்டைகளை  அடுத்த பதிவில் தொடருவோம் 


நன்றி
சதீஷ் குமார் 

Thursday, November 4, 2021

நாம் தமிழர் பேசும் தமிழ் தேசி(ய)ம் சாத்தியமா அல்லது நாம் தமிழரால் ஆட்சியை பிடிக்க முடியுமா ?

நான் அரசியல் விமர்சகன் இல்லை என்பதையும் என் அறிவுக்கு எட்டியதை நான் இங்கே எழுதியுள்ளேன் என்பதையும் நான் தெரிவித்து கொள்கிறேன்.


நாம் தமிழர் கட்சிக்கு ஏன்  'வெற்றிக்கனி'  எட்டாக்கனியாகவே உள்ளது எனபதற்கு  4 முக்கிய காரணங்களை கீழே கொடுத்துளேன் 


1)  கொள்கை பிடிப்பு 

2)  வாக்கு வங்கி

3)  மண்டலவாரி ஆதரவு 

4)  மொழிவாரி ஆதரவு


கொள்கை பிடிப்பு 


நாம் தமிழர் கட்சி கொள்கையை   ஏற்றுக்கொண்டவர்கள் (அல்லது)  மாற்றத்தை விரும்பியவர்கள் கிட்டத்தட்ட 7% பேர் என்பதை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மூலமாக நாம் எளிமையாக தெரிந்து கொள்ள முடியும் 


நாம் தமிழர் கட்சி அனைத்து தரப்பினரையும் அரவணைத்து கொண்டாலும் 'தேசியம், தெய்வீகம், திராவிடம்' என்ற கருத்தே  மக்கள் மனதில் ஆழமாக படிந்துள்ளது. 


 'திராவிட' சிந்தனையை எளிதில் விமர்சித்து விடலாம்  ஆனால்  'தேசியம் மற்றும் தெய்வீகத்தை' எதிர்க்க முற்பட்டால் ''நாட்டுப்பற்றும், ஆன்மீக சிந்தனையும்'  கொண்ட  மக்களால் இந்த  கருத்தை 

 ஏற்றுக்கொள்ளமுடியாது.


அது மட்டுமன்றி அக்கட்சி தலைவர் சீமான் சொல்வது போல் 'தமிழ்நாடு மற்றும் இலங்கை தமிழர் பகுதி' இவற்றை  ஒருங்கிணைத்து    'தமிழர்  நிலம்' என்று ஒன்றை உருவாக்குவது என்பது சாத்தியமற்ற ஒன்று (குறிப்பாக LTTE அழிக்கப்பட்ட பிறகு).   மேலும் இந்தியாவும், ஸ்ரீலங்காவும் இதை ஒருபோதும் அனுமதிக்காது என்பதே உண்மை 


எனவே கொள்கை ரீதியாக 'நாம் தமிழர்'  வெகுஜனத்தின் நம்பிக்கையை பெற இயலவில்லை என்பதே யதார்த்தம் 

 

வாக்கு வங்கி 


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழரின் வாக்கு சதவீதம் கிட்டத்தட்ட 7% உள்ளது.  அதற்கான ஆதார சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  வரும் 2024 நாடளுமன்ற தேர்தலில் அந்த கட்சியின் செயல்பாடை பொறுத்து இது 10% வரை வளர வாய்ப்பு இருக்கிறது  


https://en.wikipedia.org/wiki/2021_Tamil_Nadu_Legislative_Assembly_election


ஆனால் 10% சதவீதமாக வாக்கு வங்கி உயர்ந்தாலும் அது ஆட்சியை பிடிக்க (அல்லது)  எதிர்க்கட்சியில் அமர போதுமானதாக இருக்காது என்பதே உண்மை


நாம் தமிழர் அதன் வாக்கு சதவீதத்தை உயர்த்த கடினமாக உழைக்க வேண்டும் அல்லது கூட்டணியில் சேரவேண்டும் 

 

மண்டலவாரி ஆதரவு 


தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்ததே 


சென்னையை பொறுத்தவரை 16 தொகுதிகள் இருக்கின்றன.  சென்னை திமுகவின் கோட்டை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.  மறைந்த முதல்வர் MGRஆல் கூட சென்னையை அதிமுகவின் கோட்டையாக மாற்ற முடியவில்லை   


அதே போன்று கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை 65 (கோயம்புத்தூர்  - 10, ஈரோடு - 8, தர்மபுரி - 5, கிருஷ்ணகிரி - 6, சேலம் - 11, நாமக்கல் - 6, கரூர் - 4, திண்டுக்கல் - 7, திருப்பூர் - 8) தொகுதிகள் இருக்கின்றன.  10 வருட anti-incumbency பிறகும் அதிமுகவை 'திமுகவலேயே'  இந்த மண்டலத்தில் வீழ்த்த முடியவில்லை 


சென்னை + கொங்கு (16 + 65 = 81) இந்த இரண்டிலும் 'நாம் தமிழர்' வெல்ல கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை எனலாம்.  


மீதம் இருப்பது (234 - 81 = 153)  153 தொகுதிகள்.  இதில் 118 தொகுதிகளை ஜெயிப்பதென்பது கிட்டத்தட்ட இமயமலை உயரத்தை எட்டிப்பிடிப்பதை போன்றதாகும் 


மொழிவாரி ஆதரவு 


2011 மக்கள் தொகை கணக்கு எடுப்பின் படி தமிழ்நாட்டில் 88% சதவீதம் பேர் தமிழ் பேசுபவர்களாக இருக்கிறார்கள்.   மற்ற மொழி பேசுபவர்கள் 12% சதவீதமாக உள்ளனர்.   இதற்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது 


https://www.populationu.com/in/tamil-nadu-population


2021 சென்சஸ் இன்னும் எடுக்கப்படவில்லை.   சென்சஸ் 2022ல்  எடுக்கப்பட்டால் தமிழ்நாட்டில் பிறமொழி பேசுபவர்களின் சதவீதம் 15%ஐ தொடலாம்.  ஏனெனில் பிற மாநிலங்களில்  இருந்து  தமிழ்நாட்டில் குடிபெயர்ந்தவர்களின் (demographic change)  எண்ணிக்கை கண்டிப்பாக உயர்ந்து இருக்க வேண்டும்.  


உதாரணமாக  சென்னையில் ஆந்திராவை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும், குறிப்பாக கோவை மண்டலத்தில் வட மாநிலத்தவர் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்க வேண்டும் 


பிற மொழி (அல்லது) மாநிலத்து மக்களுக்கு 'நாம் தமிழர்'  ஆதரவு என்பது கிட்டத்தட்ட அல்லது அறவே  இருக்காது என்பது தான் உண்மை 


நன்றி 

சதீஷ் குமார்  

திருமண முறிவு ஏன் ? திருமணம் விவாகரத்தாக உளவியல் காரணங்கள் என்ன ?

நம் முன்னோர்கள் நமக்கு வகுத்து தந்த 'திருமண பந்தத்தை' நாம் புரிந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ பழகிக்கொள்ள  என்பதை இப்பதிவின் வாயிலாக நான் என்னுடைய கோரிக்கையாக வைக்கிறேன்  


அந்த காலத்தில் (1900களில்) நமது தாத்தா, பாட்டி விவாகரத்து செய்து கொண்டதாக நாம் கேள்விபடவில்லை.  அதே போல் நம் அம்மா அப்பாவும்  (2000ம் வரை) விவாகரத்து செய்து கொள்ளவில்லை.  சில விதிவிலக்குகள் இருக்கலாம் அது வேறு 


ஆனால் தற்போது (கடந்த 20 ஆண்டுகளில்)  விவாகரத்து வழக்குகள்  35% வரை பெருகி உள்ளதாக ஒரு அறிக்கை சொல்கிறது


திருமண பந்தத்தை ஏன்  இவ்வளவு சீக்கிரம் முறித்துக்கொள்ள வேண்டும் ?.  கணவன்-மனைவிக்குள் இந்த ஒத்துப்போகாத தன்மை வளர என்ன காரணம் இருக்க முடியும் ?


எனக்கு தெரிந்து இந்த 21ம் நூற்றாண்டில் 'தம்பதிகள் பிரிய' பணம், படிப்பு, அழகு, அந்தஸ்து, ஜாதி, மதம் இவை காரணமாக இருப்பதில்லை.  சில விதிவிலக்குகள் இருக்கலாம் அது வேறு 


எனக்கு தெரிந்து இந்த நூற்றாண்டுக்கு ஏற்றவாறு சொல்ல வேண்டும் என்றால்  இரண்டு காரணங்களை சொல்லலாம்   (1)   ஆண்-பெண் சுதந்திரம்   (2)   தாமத திருமணம்.   


மேற்கூறிய இரண்டு காரணங்களும் ஒன்றுக்கு-ஒன்று  சம்பந்தப்பட்டவையே.  அது எப்படி என்பதை இப்போது சுருக்கமாக பார்க்கலாம் 


தாமத திருமணம்


தற்போது பெண் கிடைப்பது  என்பது  'குதிரை கொம்பாக' இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்


இந்த காலத்தில் திருமணம் செய்யும் வயது சராசரியாக பெண்ணிற்கு 27 அல்லது 28 வயதில் தான் நடக்கிறது.   அதே போல் ஆணுக்கு  சராசரியாக 30க்கு மேல் தான் திருமணம் நடக்கிறது.  இதில் இன்னும் நிறைய பேருக்கு 35 அல்லது 38 வயதில் கூட திருமணம் நடக்கிறது என்பதும் நமக்கு தெரிந்ததே 


சரி தாமதமாக திருமணம் செய்தால் என்ன தான் பிரச்சனை ?


  பிள்ளைகள் தன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் (அதாவது 21 வயது வரை)  தன்னுடைய பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்க்கப்படுகிறார்கள்.  


படிப்பை முடித்து உடனே  வேலை கிடைத்து 25 அல்லது 26 வயதிற்குள் திருமணம் செய்து விட்டால் 'கட்டுப்பாடு' என்பது 'பெற்றோர்களிடம்' இருந்து 'கணவன் அல்லது மனைவியிடம்' சென்று விடும்.  திருமணம் ஆனவுடன் 'ஆண் மற்றும் பெண்' இருவருமே 'குறுகிய காலத்திற்குள்' மீண்டும் 'கட்டுப்பாடு' என்கிற வளையத்தில் வந்துவிடுவார்கள்.  சட்டமும் அந்த வயது வரம்பை தான் பரிந்துரைக்கிறது 



ஆனால் படிப்பு முடித்து 28-35 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டால் இங்கே தான் 'ஆண்-பெண்' சுதந்திரம் தலை தூக்கும்


படிப்பு முடித்து 7 வருடங்கள், 10 வருடங்கள், 12 வருடங்கள் கழித்து 'நீண்ட இடைவெளியில்' திருமணம் செய்தால் 'ஆண்-பெண்' மனநிலை எப்படி இருக்கும்.  திருமணம் ஆகும் வரை 


1)  தாங்கள் நினைத்ததை நினைத்தபடி செய்து கொள்வார்கள் 

2)  நண்பர்கள்-நண்பிகளுடன் நினைத்தபடி நினைத்த நேரத்தில் பழகி கொள்வார்கள் 

3)  தங்களுக்கு தேவையானதை தாங்களே செய்து கொள்வார்கள்

4)  பெரிய அளவில் கேட்க ஆள் இல்லாததால்  தங்களுக்கு பிடித்தவற்றை அல்லது பிடித்த விஷயங்கள் உடனே நிறைவேற்றி கொள்வார்கள் அல்லது நிறைவேற்றி கொள்ள முயல்வார்கள்  


நாட்கள், வருடங்கள் செல்ல செல்ல மேலே சொன்ன விஷயங்களுக்கு 'ஆண்-பெண்' இருவருமே தங்களை பெருமளவில் பழக்கி கொண்டு இருப்பார்கள்.  


30-35 வயதில் திருமணம் செய்தால் என்ன ஆகும் ?  மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் நினைத்தபடி நடக்காமல் போகும்.  'ஆண்-பெண்' இருவருக்குமே இது பொருந்தும்.    


ஏனெனில், பல வருடங்களாக தங்கள் விருப்பப்படி  இருந்துவிட்டு திடீர் என்று 'கட்டுப்பாட்டு' வளையத்திற்குள் வர இருவருமே தங்களை  மனதளவில் தயார் செய்து கொள்ள நேரம் பிடிக்கும் அல்லது ஒரு சில பேருக்கு இது சுத்தமாக பிடிக்காமல் போகும்.  கணவன்-மனைவிக்குள் இது ஒரு விதமான 'பிணக்கம்' அல்லது 'சகிப்பற்ற தன்மையை'  உருவாக்குகிறது 


என்னை பொறுத்த வரை 'ஆண்-பெண்'  இருவரையுமே எந்த அளவுக்கு சீக்கிரம் 'கட்டுப்பாடு' என்கின்ற வளையத்திற்குள் வைத்திருக்கிறோமோ அது அவர்களையும் இந்த சமூகத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை  


'Solar-system'  கட்டுப்பாடுடன் இயங்குவதால் தானே இந்த பிரபஞ்சம் ஒழுங்காக இயங்குகிறது 


நன்றி
சதீஷ் குமார் 

Voice of Voiceless - Neeya Naana - Reckless debate

 This is a post about Neeya - Naana that aired last Sunday. It was a very effectively staged show I will start the post by reminding you tha...