Monday, January 11, 2021

செயற்கை கருத்தரிப்பு முறை (IVF) - பரிணாம வளர்ச்சியா ? பகுத்தறிவு மடமையா ? - 5

செயற்கை கருத்தரிப்பு முறை - IVF

 செயற்கை கருத்தரிப்பு முறை (அல்லது) IVF குழந்தை அற்றவர்களுக்கு ஒரு வரம் என்று முந்தைய பதிவுகளில் சொல்லி இருந்தேன்


ஆனால், வரம் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே?  என்ன தான் கடும் தவம் செய்தாலும் கடவுள் நினைத்தால் தானே வரத்தை கேட்டு பெற முடியும் மேலும் நாம்  வரம் பெற, அதற்கான விலையை கொடுத்து தானே ஆகவேண்டும்.



1)  IVF முறையின் மூலம் குழந்தை பெறுவது சாத்தியமென்றாலும் கூட இம்முறையின் மூலம் கருவை உருவாக்க 45% மட்டுமே சாத்தியமாகும்.


ஏன் அப்படி  என்றால் பெண்களின் கருப்பையில் உள்ள கருமுட்டைகளின் எண்ணிக்கை, கருமுட்டைகளின் தரம், ஆண் விந்தணுவின் தரம் இவற்றை எல்லாம் பொறுத்தே கரு உருவாகும் வாய்ப்பு உள்ளது 


30 அல்லது 32 வயதை கடந்தவர்களுக்கு மாதவிடாய் எப்பொழுதும் போல் வந்தாலும், கருமுட்டைகளின் தரம் பற்றி தெரிந்து கொள்ள வழியில்லை.  இந்த வயதில் உள்ள பெண்களுக்கு  மாதவிடாய் காலத்தில், கருமுட்டை வெளியில் வந்தாலும் அது  'matured ' ஆக  இல்லையென்றால் ஆணின் விந்தை அதனால் ஈர்க்க முடியாது (attraction process)


எனக்கு தெரிந்து தற்போது உள்ள மருத்துவ முறைகளின்படி கருமுட்டைகளின் தரத்தை (egg quality) மெருகேற்ற (improve) முடியாது.  கருமுட்டைகளை வெளியே எடுத்து fertilization (அதாவது ஆணின் விந்தை பெண்ணின் கருமுட்டையோடு சேர்த்தல்) செய்தால் மட்டுமே கருமுட்டைகளின் 'quality' மருத்துவர்களுக்கே தெரியவரும் 


2)  பெண்களுக்கு uterusல் எந்த பாதிப்பும் இல்லை என்று சோதித்து பார்த்த பின்னரே சிகிச்சை தொடங்கப்படும்.  uterusல் ஏதேனும் பாதிப்பு இருந்தால் முதலில் அதை சரி செய்ய தனியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் 


3)  செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்று கொள்ளவேண்டுமெனில் பெண்களுக்கே அனைத்து விதமான சிகிச்சைகளும் அளிக்கப்படும்.  ஆண்களை பொறுத்தவரை ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகளை விழுங்க வேண்டியிருக்கும்.


4)  IVF முறையின் மூலம் குழந்தை பெற வேண்டுமாயின் நாம் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும்.  IVF என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனி என்பதே கசப்பான உண்மை 


5)  IVF முறையில் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்கிற முறையும் உள்ளது.  அதெப்படி சாத்தியம் ?  வெறும் 45% சதவிகிதம் தானே சாத்தியம் என்று தானே சொல்லி இருக்கிறேன்.


ஒரு வேளை பெண்ணின் கருமுட்டையின் தரம் சரியில்லை என்னும் பட்சத்தில் வேறொரு இளவயது  பெண்ணின் கருமுட்டையை (egg donor) பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பொறுத்துவார்கள்.  இம்முறையின் மூலம் கரு நிச்சயம் உருவாகும் 


6)  IVF முறையில் மேலும் ஒரு பாதக அம்சம் உள்ளது அதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்


மேலே சொன்ன தகவல்களை எல்லாம் இதை படிப்பவர்கள் மருத்துவர்களிடம் தாராளமாக  பரிசீலித்து கொள்ளலாம் .  IVF முறையில் குழந்தை நிச்சயம் என்று நீங்கள் நினைத்து இருந்தீர்கள் என்றால், அதை மாற்றி கொள்ளுங்கள் 


அழகு, பணம், ஆஸ்தி, அந்தஸ்து எல்லாவற்றையும் பாருங்கள்.  வேண்டாம் என்று சொல்லவில்லை.  அதன் கூடவே உங்கள வயதையும் சேர்த்து எண்ணி பாருங்கள். 

 அது மட்டுமன்றி பெண்கள், 'டுபாக்கூர் பகுத்தறிவாதிகள்' மற்றும் 'போலி பெண்ணடிமைவாதிகள்' போன்றவர்களிடம் சிக்காமல் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள் 


அரசாங்கம் சொல்லும் வயதில்  திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்றாலும் ஓரளவிற்கு முயற்சித்து கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்பதே என் தாழ்மையான கருத்து 


பகுத்தறிவு என்பதே நாம் அனைத்து விஷயங்களிலும் விருப்பு-வெறுப்பு அற்று யோசித்து உண்மையை உணர்ந்து  அதன்படி நடந்து கொள்வதே ஆகும்.  IVF என்பது ஒருவகை பரிணாம வளர்ச்சி என்றாலும் கூட, அதன் சாதக பாதக உணர்ந்து IVFஐ முடிந்த அளவு தவிர்ப்பதே நமக்கு நன்மையாகும் 


மழலை செல்வத்தை பெற்று அனைவரும் இன்புற்று இருக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்தித்து கொள்கிறேன் 


வேறு ஒரு தலைப்பில் அடுத்த பதிவில் சந்திப்போம் 


நன்றி 

Monday, January 4, 2021

செயற்கை கருத்தரிப்பு முறை (IVF) - பரிணாம வளர்ச்சியா ? பகுத்தறிவு மடமையா ? - 4

செயற்கை கருத்தரிப்பு முறை - IVF

பொதுவாக 32 வயதிற்கு மேல் ஆன பெண்களுக்கு மாதவிடாய் சரியாக நேரத்தில் வராமல் இருந்தால் (irregular periods)  அது 'கருமுட்டைகளின்'  உற்பத்தி குறைவை  குறிப்பதாகும்.    


ஒரு ovaryக்கு 7-8 கருமுட்டைகள் உருவாகும்.  இரண்டு ovaryகளையும் சேர்த்தால் மொத்தம்  14-16 கருமுட்டைகள் உருவாகும்.  irregular periods பிரச்சனை இருந்தால் கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைவதற்கான சாத்தியம் உண்டு.  இது பொதுவாக  30 அல்லது 32 வயதை கடந்தவர்களுக்கு பொருந்தும்


அறிவியல் கருமுட்டைகளை  அதாவது   (1)  A Grade   (2)   B grade என்று   பல தரமாக பிரித்து இருக்கிறது.  இதில் 'A' grade கருமுட்டைக்கே குழந்தையை உருவாகும் சக்தி உள்ளத


பொதுவாக 30 அல்லது 32 வயதை கடந்தவர்களுக்கு மாதவிடாய் சரியாக வந்தாலும், எத்தனை 'A' grade கருமுட்டைகள் உருவாகிறதோ அதனை பொறுத்தே குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.  


மற்ற grade கருமுட்டைகளை தவிர்க்க வேண்டும் என்பது அல்ல இதன் பொருள்.  Advantage எந்த gradeகிற்கு அதிகம் என்பதே இங்கு முக்கியமாகிறது 


மேற்சொன்ன விஷயத்தை நீங்கள் மருத்துவர்களிடம்  பரிசீலித்து கொள்ளலாம்   எனவே தான் உரிய வயதில் திருமணம் செய்தல் அவசியமாகிறது


அரசாங்கம் ஆணுக்கு 25வயது, பெண்ணுக்கு 21வயதில் திருமணம் செய்யுங்கள் என்று சொல்கிறது.


ஆனால், மக்கள் 'அறிவியல்' சொல்லும் உண்மைகளை உணராமலும் (அல்லது) தெரியாமலும்,  'அரசாங்கம்' சொல்வதை கேட்காலும் இருத்தலே தற்போது பகுதிற்க்கு ஒரு IVF மய்யம் உருவாக காரணமாக இருக்கிறது 


திருமணம் செய்தாலே பெண்ணடிமைதனம் ஒரு டுபாக்கூர் பகுத்தறிவு(அற்ற) கூட்டம் நம் ஊரில் இருக்கிறது.  


பணம், ஆஸ்தி, அந்தஸ்து, சுயவிருப்பம் இது போன்ற பல காரணங்களால் திருமணம் செய்வது கால தாமதமாகிறது.  90ஸ் kids என்கிற சொல்லாடலே இதற்க்கு சான்று


என்னுடைய கருத்து என்னவென்றால், திருமணம் செய்தால் உரிய நேரத்தில் திருமணம் செய்து கொள்ளுங்கள்.  இல்லையேல் ஆணை விட பெண்ணிற்கே பாதிப்பு அதிகம்.  அதிலும் இது போன்ற விஷயங்களில் பெண்களே பெண்களுக்கு எதிராக இருப்பது வேதனையான விஷயம் தான்.


மேலும் சில தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம் 


நன்றி

Sunday, January 3, 2021

செயற்கை கருத்தரிப்பு முறை (IVF) - பரிணாம வளர்ச்சியா ? பகுத்தறிவு மடமையா ? - 3

செயற்கை கருத்தரிப்பு முறை - IVF


நோய் நாடி நோய் முதல் நாடி என்பது நம் முன்னோர்கள் வாக்கு.  


விஞ்ஞானம் என்பது நம்முடைய அன்றாட வாழ்வில் நமக்கு பெருமளவு உபயோகமானதாக இருக்கிறது என்பது உண்மையே.  ஆனால் அதே நேரத்தில் விஞ்ஞானம் சர்வ ரோக நிவாரணி அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் 


இப்போது மீண்டும் முந்தைய பதிவில் பதிந்த கேள்வியை பார்ப்போம் 


கேள்வி:  30 அல்லது 32 வயதிற்கு மேல் திருமணம்  செய்து யாரும் இயற்கையாக பிள்ளை  பெறாமலா இருக்கிறார்கள் ?


பதில்:   இதற்கு சுருக்கமான பதில் என்னவென்றால் அவரவரின் உடல் சம்பந்தப்பட்ட விஷயம் இது.  ஆங்கிலத்தில் 'no two bodies are same' என்று சொல்வார்கள் அல்லவா.


 கொஞ்சம் விரிவாக சொல்லவேண்டும் என்றால் ஆண் விந்துவின் பலத்தை பொருத்தும், பெண் கருமுட்டையின் (follicle) தரத்தை பொறுத்தது.  வயது ஆக ஆக,  ஆண் விந்துவின் தரமும் பெண் கருமுட்டையின் தரமும் குறைந்து கொண்டே வரும் என்பது இயற்கை நியதி


செயற்கை கருத்தரிப்பு முறை (IVF)  ஏன் தேவைப்படுகிறது என்பதை மனதில் வைத்தே  நாம் 'அக' மற்றும் 'புற' காரணங்களை கடந்த இரண்டு பதிவ்வுகளில்  ஆராய்ந்தோம் 


'குழலினித யாழினி தென் தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர' என்ற பாரதியின் பாடல் குழந்தை செல்வத்தின் அருமையை நமக்கு உணர்த்துகிறது 


குழந்தை அற்றவர்களுக்கு செயற்கை கருத்தரிப்பு IVF) முறை ( கிட்டத்தட்ட ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும் 


IVF முறையின் சாதக,பாதகங்களை  பற்றி பார்க்கும் முன் இந்த சமுதாயம் அல்லது மக்கள் IVF மருத்துவமனைக்கு செல்பவர்களை பற்றி கொண்டுள்ள சில தவறான கண்ணோட்டங்களையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.  அவற்றுள் சில 


1)  IVF மருத்துவமனைக்கு செல்லும் ஆண்கள் ஆண்மையற்றவர்கள் அல்லது ஆண்மை குறைபாடுள்ளவர்கள் 

2)  IVF மருத்துவமனைக்கு செல்லும் பெண்களை பற்றி நாம் விவாதிக்க வேண்டிய அவசியமே கிடையாது 


இயற்கையாகவே ஆண்களை விட பெண்களுக்கு குழந்தை உருவாகாமல் இருக்க பல காரணங்கள் உள்ளது .  நான் மருத்துவன் இல்லை என்றாலும் கீழே குறிப்பிட்டுள்ள காரணங்கள் அனைவரும் அறிந்ததே 


1)  குறைந்த அளவு ரத்தத்தால் மாதவிடாய் சரியாக வரமால் இருத்தல்

2)  கர்ப்பப்பைக்கு  (uterus) சரியான அளவில் இரத்தம் செல்லாமல் இருத்தல் அல்லது சரியான அளவில் (size) இல்லாமல் இருத்தல் 

3)  Laparascopy போன்ற major surgery (பொதுவாக) இதற்க்கு முன்னர் அவர்களுக்கு செய்யப்பட்டு இருந்தாலும் 

4)  இரண்டு ovaryகளில் ஒன்றில் குறை இருந்தாலோ அல்லது ஒரு ovaryயே இல்லாமல் இருத்தல் போன்ற நிறைய காரணங்கள் இருக்கின்றன 


மனித உடல் அமைப்பு rocket science விட complexity நிறைய என்பதால் எல்லாவற்றையும் அலசி ஆராய வேண்டும்.


ஆகவே,  IVF மருத்துவமனைக்கு செல்பவர்களை ஆண்மையற்றவர்கள் என்றும்  பெண்ணை பிள்ளை பெறமுடியாதவள் என்றும்  ஒற்றை வரியில் நாம் சுருக்க கூடாது என்பதே என் தாழ்மையான கருத்து 


நாளைய பதிவில் IVF முறையின் சாதக பாதகங்களை பற்றி பார்ப்போம் 


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 


நன்றி

Saturday, January 2, 2021

செயற்கை கருத்தரிப்பு முறை (IVF) - பரிணாம வளர்ச்சியா ? பகுத்தறிவு மடமையா ? - 2

செயற்கை கருத்தரிப்பு முறை - IVF


அந்த காலத்தில்,  பிறந்து 1 அல்லது 2 வயதே ஆன குழந்தைகளுக்கு திருமணம் செய்யும் மடமை இருந்தது எப்படி உண்மையோ அதே போன்று இந்த காலகட்டத்தில் 30 அல்லது 32 வயதிற்கு மேல் திருமணம் செய்வதும் ஒரு வகை மடமையே ஆகும் எனப்து என் கருத்து 


இந்த காலத்தில் 30 அல்லது 32 வயதிற்கு மேல் திருமணம் செய்ய   அக மற்றும் புற காரணிகள் நிறையவே இருக்கின்றன .   உதாரணமாக சிலவற்றை பார்ப்போம் 


1)   நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம் என்று உபதேசிப்பது  (அல்லது)   ஓரளவிற்கு பணம் சேர்த்து விட்டு பின்பு திருமணம் செய்துகொள் என்று சொல்வது 

2)  திருமணம் செய்து கொண்டால் தங்கள் சுதந்திரம் பறிபோய்விடும் என்று நினைக்கும் பெண்கள் 

3)  திருமணம் செய்வதே பெண்ணடிமைத்தனம் என்று தவறாக போதிக்கும் பகுத்தறிவு கூட்டம் (???)

4)  அடியோடு மாறிவிட்ட உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உணவின் தரம் 

5)  இந்த காலத்தில் ஆண்களுக்கு பெண்  கிடைப்பது சற்று கடினமாக இருக்கிறது.  

90s kids  என்று அழைக்கும் அளவுக்கு இன்றைய சூழல் உள்ளது என்பன போன்று நிறைய காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம் 


இன்று பட்டிமன்றங்கள் மற்றும் மேடைகளில் பேசுபவர்கள் பகுதிக்கு (area) ஒரு செயற்கை கருத்தரிப்பு மையம் (IVF) வந்துவிட்டது  என்று சொல்வதை நம்மால் பார்க்க முடிகிறது


இதில் வேடிக்கை என்னவென்றால் பெண்ணுக்கு குழந்தை பிறக்க தாமதமானாலோ அல்லது குழந்தை பிறக்கவில்லை என்றாலோ அந்த பழி default ஆக பெண்ணின் மீதே விழுகிறது.


சரி.  இப்போது 30 அல்லது 32 வயதிற்கு மேல் திருமணம் செய்தால்   என்ன?   குடியா மூழ்கிவிடும்?  30 அல்லது 32 வயதிற்கு மேல் திருமணம்  செய்து யாரும் இயற்கையாக பிள்ளை  பெறாமலா இருக்கிறார்கள்  என்று  நீங்கள் கேட்பது புரிகிறது 


செயற்கை முறை கருத்தரிப்பு அல்லது  IVF முறையின் சாதக, பாதகங்கள் மற்றும் இந்த முறை எத்தனை சதவிகிதம் வேலை செய்யும் என்பதையும் என்னால் முடிந்த அளவுக்கு விவரிக்கிறேன் 


அடுத்த பதிவில் தொடருவோம் 


நன்றி  

Voice of Voiceless - Neeya Naana - Reckless debate

 This is a post about Neeya - Naana that aired last Sunday. It was a very effectively staged show I will start the post by reminding you tha...